For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொய் சொல்கிறது கர்நாடகம்: கோபால் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கர்நாடக அதிரடிப் படையிடனரால் கைது செய்யப்பட்டுள்ள தனது வாரஇதழின் நிருபர் சிவசுப்பிரமணியன்உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

சிவசுப்பிரமணியம் வீரப்பனைச் சந்திக்கச் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது அவரை ராமபுரா காட்டுப்பகுதிக்குள் கைது செய்ததாகவும் கர்நாடக போலீசார் கூறியுள்ளனர். இது பொய்யான தகவல். அவரை ஆத்தூரில்உள்ள அவரது வீட்டுக்கு வெளியே தான் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஆதாரம் உள்ளது.

தமிழக பதிவு எண் கொண்ட ஒரு ஜீப்பில் வந்த இந்த போலீசார் அவரது வீட்டுக்கு வெளியே உள்ள டீக் கடையில்நெடு நேரம் காத்திருந்தனர். சிவசுப்பிரமணியன் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கைது செய்து ஜீப்பில்அள்ளிப் போட்டுச் சென்றனர். (இதை டீக் கடைக்காரரே வீடியோவில் சொல்கிறார்).

பின்னர் அவரது மனைவியிடம் நாமக்கல் எஸ்.பி. விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த பொது மக்களும்போலீசார் இங்கிருந்து தான் சிவசுப்பிரமணியத்தைக் கைது செய்ததாகக் கூறியுள்ளனர். இதுவும் வீடியோவில்உள்ளது.

ஆனால், காட்டுக்குள் வீரப்பனுக்குக் கொடுப்பதற்காக ஆயுதங்கள், எலெக்ட்ரானிக் பொருள்களுடன்சிவசுப்பிரமணியம் சென்றபோது கைது செய்யப்பட்டதாக பொய்யான தகவல்களை போலீசார் தருகின்றனர்.

முதலில் அவ்ர மீது சாதாரண வழக்குகளைத் தான் பதிவு செய்தனர். பின்னர் மிகக் கடுமையான வழக்குகளின் கீழ்அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அவரை ஜாமீனில் வெளியே விடாமல் செய்து தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் முயல்கிறது.

அவரை சித்திரவதை செய்து பொய்யான வாக்குமூலம் வாங்கவும் முயற்சி நடக்கிறது. அவரது உயிருக்கே ஆபத்துஏற்பட்டுள்ளது. இந்த கைது விவாரத்தில் கர்நாடகம் மட்டுமல்ல தமிழக அரசுக்கும் பொறுப்புண்டு.

எனவே, அவரை விடுவிக்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கோபால்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X