For Daily Alerts
Just In
லாபம் வந்தால் தான் போனஸ்: சுவாமி புதிய யோசனை
மதுரை:
நிறுவனத்தின் லாபத்துக்கு ஏற்ற போனஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் எனஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், இப்போது உள்ள போனஸ் வழங்கும் முறையை மாற்ற வேண்டும்.ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீத போனஸ் வழங்கியே ஆக வேண்டும் என்பது சோசலிஸ தத்துவத்தின்கீழ் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இது இன்றைய நிலையில் ஒத்துவராது என்பதால் சீனா கூட இதை இப்போதுபின்பற்றவில்லை.
அதே நேரத்தில் தமிழக அரசு செய்தது மாதிரி திடீரென போனஸை நிறுத்திவிடக் கூடாது. இந்த ஆண்டுபோனஸைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு முதல் லாபம் ஈட்டினால் மட்டுமே போனஸ் தருவோம்என போக்குவரத்து ஊழியர்களை அரசு எச்சரித்திருக்கலாம் என்றார்.
Comments
Story first published: Monday, November 26, 2001, 5:30 [IST]