சென்னையில் பட்டப் பகலில் பெண் படுகொலை - நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் பட்டப் பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சிவகாசியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பல ஆண்டுகளாகஅதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
பத்து வருடத்திற்கு முன்பு கோடம்பாகத்தில், கங்கையம்மன் கோவில் தெருவில் புதிய வீடு வாங்கி குடியேறினார்.இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். ராஜ்குமார்என்ஜீனியரிங் படித்து வருகிறார், லட்சுமி பிளஸ் டூ படிக்கிறார்.
நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் நாகேஸ்வரனின் மகன் ராஜ்குமார் கல்லூரியிலிருந்து வீடுதிரும்பினார். வீட்டின் வெளிக் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு கேள்விக்குறியுடன் வீட்டுக்குள் போனார். அங்குஅவரது அம்மாவைக் காணவில்லை.
ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்தவர் படுக்கை அறைக்குள் பார்த்தபோது அங்கு சந்திராஅலங்கோலமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து பதறினார்.
உடனடியாக போலீஸாருக்கும், தனது தந்தைக்கும் போன் செய்தார். இணை கமிஷனர் திரிபாதி, கிண்டி துணைகமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முதல் கட்ட விசாரணையின்போது சந்திரா அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலி, வீட்டிலிருந்த 20 பவுன் நகைகள்,பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
சந்திரா கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு கத்திரிக்கோல்கள் கிடந்தன. மேலும் கழுத்து நெரிக்கப்பட்டநிலையில் சந்திரா பிணமாகக் கிடந்தார்.
இதனால் கத்திரிக்கோல்களைப் பயன்படுத்தியும், கை அல்லது கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டும் சந்திராகொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் டைனிங் ரூமில் இரண்டு டீ கப்கள் இருந்தன. எனவேகொலையாளிகள் இரண்டு பேராக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே கப்களில் டீ தருவது நாகேஸ்வரன்குடும்பத்தினரின் வழக்கம். எனவே கொலையாளிகள் சந்திராவுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என்றும்கருதப்படுகிறது.
இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications