நிதி நெருக்கடி: புதிய பதவிகளுக்கு அரசு தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிதாககொண்டுவரப்படும் பதவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் நிலவிவரும் நிதி நெருக்கடியைச் சீர்செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பயணம் மற்றும் மருத்துவச் செலவில் 10 சதவீதம்குறைக்கப்பட்டது.

மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு ரூ.52 கோடி வரை அரசுக்கு மிச்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் பதவிகளில் காலியிடங்கள் ஏற்பட்டால் நிர்வாகக் காரணங்களுக்காக மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளைவைத்துச் சமாளித்துக் கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.

பதவி உயர்வுக்கு வாய்ப்பளிக்கும் அடிப்படையில் இதுபோன்ற புதிய பதவிகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும்அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+