தலைமைச் செயலகத்திலும் சிகரெட், பான் மசாலாவுக்கு "தடா"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலக அலுவலக வளாகத்திலும் பீடி, சிகரெட், குட்கா, புகையிலை, பான் மசாலாஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணி துறை சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில், தலைமைச் செயலக வளாகத்தில் சிகரெட் புகைப்பது, புகையிலை, குட்கா, பான் மசாலாபோடுவது, விற்பது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் தலைமைச் செயலக வளாகத்தில் இந்த பொருட்களின் விற்பனைநிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்த பலரும் புகை பிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications