வீரப்பன் வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்
கோயம்புத்தூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் தொடர்பான 9 வழக்குகளை தமிழக சிபிசிஐடிபோலீசார் விசாரிக்கவுள்ளனர்.
வழக்கமான பணிகளில் அதிகம் ஈடுபட வேண்டியிருப்பதால், வீரப்பன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உள்ளூர்போலீசார் முழுக் கவனத்தை செலுத்த முடியாத காரணத்திற்காகவே, இவ்வழக்குகள் சிபிசிஐடிக்குமாற்றப்பட்டுள்ளன.
இந்த விசாரணைக் குழுவில் ஒரு கூடுதல் சூப்பரின்டென்ட், மூன்று துணை சூப்பரின்டென்ட்கள் மற்றும் ஐந்துஇன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளைத்தைச் சுற்றித்தான் பெரும்பாலான குற்றங்களை வீரப்பன் கும்பல்செய்திருப்பதால், அந்த ஊரைத் தலைமையகமாகக் கொண்டே இந்த சிபிசிஐடி குழுவினர் செயல்படுவர்.
காட்டிலிருந்து சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டி கடத்தியதிலிருந்து, ஏராளமான வன அதிகாரிகளையும்போலீசாரையும் கொன்றது வரை ஏராளமான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள வீரப்பன், கடந்த ஆண்டு கன்னடநடிகர் வீரப்பனையும் கடத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications