பால், மது விலையும் உயரும்
சென்னை:
நிதி ஆதாரத்தைப் பெருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பால் விலையையும் உயர்த்திக் கொள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அரசுஅனுமதியளித்துள்ளது. இதனால் பால் விலையும் விரைவில் உயரும்.
பால் கொமுதல் கூட்டுறவுக் கழகங்கள் அவ்வப்போது பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே போல இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் மீதான வரி 50 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகஉயர்த்தப்பட்டுள்ளது.
லாட்டரி பணம்:
அரசுக்கு வருவாயைத் தரும் ஆன்-லைன் இன்டர்நெட் லாட்டரிக்கும் உடனடியாக அனுமதி தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல மற்ற லாட்டரிகள் விற்பனை, கமிஷனையும் மாற்றியமைத்து அரசுக்கு அதிக வருவாய் வரும்வகையில் பார்த்துக் கொள்ளப்படும். தமிழக அரசு லாட்டரியின் பரிசுத் தொகை 63 சதவீதத்திலிருந்து 68சதவீதமாக உயர்த்தப்படும். லாட்டரி ஏஜெண்டுகளின் கமிஷன் 78 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாககுறைக்கப்படும். இந்த நடவடிக்கைகளால் மொத்த லாட்டரிப் பரிசுப் பணத்தில் 9 சதவீதம் அரசுக்கு வரும்.












Click it and Unblock the Notifications