For Daily Alerts
Just In
நீதிமன்றத்துக்குள் ஆயுதங்களுடன் வந்த கும்பல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கோர்ட்டுக்குள் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பலைப் போலீசார்கைது செய்தனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அனந்த மோகன் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட முண்டக்கன்னி என்ற பெண்ணின் கொலை வழக்கில் சாட்சிகளான இரண்டுபேர் இன்று(புதன்கிழமை) கோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ளனர்.
அவர்கள் இரண்டு பேரையும் தாக்குவதற்காக 10 பேர் கொண்ட கும்பல் கோர்ட்டுக்குள் நுழைந்தது. இவர்கள்அனைவரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர்.
ஆனால் இவர்கள் அனைவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் ஓடையன் சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர் என்றார்.
Comments
Story first published: Wednesday, November 28, 2001, 5:30 [IST]