புலிகள் மீதான தடையை நீக்குவோம்: ஐக்கிய தேசிய கட்சி
கொழும்பு:
நாங்கள் வெற்றி பெற்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவோம் என்றுஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொலைக்காட்சியில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்ரணில் விக்கிரமசிங்கே, எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதடையை ரத்து செய்வதுடன், அவர்களை அழைத்து முறையான பேச்சுவார்த்தைகள் நடத்துவோம் என்றுகூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக அதிபர் சந்திரிகா தலைமையிலான அரசு, விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்குஅழைத்து வருகிறது.
ஆனால் விடுதலைப் புலிகள் தளபதி பிரபாகரனோ, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதடையை நீக்கினால் தான் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவோம் என் அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications