For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை மாநகராட்சியைக் கலக்கிய பாம்புகள்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடமாடிக்கொண்டிருந்த 26 கொடி விஷப்பாம்புகள்பாம்பாட்டிகளை வைத்துப் பிடிக்கப்பட்டன.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் புதர்களும், அதையொட்டிய பகுதிகளில் பழைய பொருட்களைபோட்டு வைக்கும குடோன்களும் இருக்கின்றன.

இதனால் இங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. திடீர் திடீர் என்று பாம்புகள் கண் முன்னால்ஓடுவதும், படம் எடுப்பதுமாய் ஆட்களை மிரட்டிக் கொண்டிருந்தன.

மாலை வேளைகளில் மாநகராட்சி ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் நடக்கவே அச்சப்பட்டுக் கொண்டிருந்தனர்.இதையடுத்து பாம்புத் தொல்லையை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்து, பாம்பாட்டிகள்வரவழைக்கப்பட்டனர்.

மகுடி எடுத்து அவர்கள் மீட்டிய இசையில் வசமாகி பொந்துகளிலும், புதர்களிலும் இருந்து பல கொடிய வகைபாம்புகள் பாம்பாட்டிகளை நோக்கிப் படை எடுத்தன.

நாகம், கட்டுவிரியன் உள்பட 26 பாம்புகள் பிடிக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X