இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு
சென்னை:
ஒய் 2 கே போன்ற ஒரு பிரச்சனை அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பதால் விரைவில் இந்திய சாப்ட்வேர்நிறுவனங்களுக்கு பல ப்ராஜக்ட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பல பிரச்சனைகள் ஏறபட்டன. இந்தப் பிரச்சனை பிறகு சரி செய்யப்பபட்டது. இதைச் சரி செய்வது குறித்தபிராஜக்ட்கள் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அதிகமாகக் கிடைத்தது. இதனால் பலருக்கு வேலைவாய்ப்பும்கிடைத்தது.
இந்நிலையில் இதேபோன்ற ஒரு பிரச்சனை அமெரிக்க நிறுவனங்களில் தற்போது ஏற்பட்டிருப்பதாகவும், அதைத்தீர்ப்பதற்கு இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் என்றும் லேசர் சாப்ட்இன்போசிஸ்டம்ஸ் நிறுவன அதிபர் பி.எஸ்.கமாத் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் உலக வர்த்தக மையக்கட்டிடங்கள்இடிந்து தரைமட்டமானது. இந்தக் கட்டிடங்களில் இருந்த பல நிறுவனங்கள் தங்களின் முக்கிய ஆவணங்களைதங்களிடம் இருந்த சர்வரில் ஸ்டோர் செய்து வைத்திருந்தன.
ஆனால் அந்த ஆவணங்களுக்கான பிரதிகளை எடுக்கமால் இருந்துள்ளதால், அவற்றைக் கண்டுபிடிக்க தற்போதுவழியில்லை. சர்வர்கள் எல்லாம் இடிபாடுகளுக்குள் சிக்கி பாழாகி விட்டன.
இதேபோன்ற நிலை ஒற்றைச் சர்வர்களை வைத்து ஸ்டோர் செய்துவரும் அனைத்து நிறுவனங்களுக்கும் வரக்கூடும்என்று அச்சம் அவர்களிடையே தற்போது எழுந்துள்ளது.
எனவே இன்னும் சில ஆண்டுகளில், தங்களிடம் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், அவற்றின் பிரதியை எடுத்துமற்றொரு உபரி சர்வரில் சேகரித்து வைக்கவும் பல நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளன.
இதற்கான ஆர்டர்களை விரைவில் அந்த நிறுவனங்கள் வெளியிட உள்ளன. அப்போது இந்திய சாப்ட்வேர்நிறுவனங்களுக்கு அதிக ப்ராஜக்ட்டுகள் வர வாய்ப்புள்ளது.
ஆனால் கடந்த முறை (ஒய் 2 கே) யைப் போல இந்த முறை தரமற்ற நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பிருக்காது.அப்போது இதைப் பற்றி அவர்களிடம் சரியான முன் அனுபவம் இல்லாததால் ஏராளமான பொருட்செலவுஏற்பட்டது என்றார்.