For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபரேஷன் பீதியில் பாட்டி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அறுவைச் சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்போமோ, மாட்டோமோ என்று பயந்த ஒரு பாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை பெரம்பூரையடுத்துள்ள அகரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. 75 வயதான இவர் புற்றுநோயாளி.

சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தேவகிக்கு அறுவைச் சிகிச்சைசெய்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் திருநெல்வேலியில் தங்கராஜ் என்பவருக்கு வயிற்றில் கத்திரிக்கோலை வைத்துஅறுவைச் சிகிச்சை செய்த விஷயம் வெளியானது.

இதை அறிந்த தேவகி பயந்தார். தனக்கும் அதுபோல ஆனால் உயிர் பிழைப்போமோ மாட்டோமோ என்றுபயந்துள்ளார்.

இதையடுத்து தனது அறையில் உள்ள மின் விசிறியில் தேவகி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X