நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னை வான் வெளியில் அமெரிக்க ஹெலிகாப்டர் அத்துமீறி பறந்த விவகாரம் இன்று (புதன்கிழமை)நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்தியாவின் பாதுகாப்புக்கு வந்த ஆபத்து என்பது போன்ற கோஷங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

பிரதமர் வாஜ்பாய் உடனடியாக இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போதுஅவையில் மூத்த அமைச்சர்கள் யாரும் இருக்கவில்லை.

சம்பவம் நடந்து 48 மணி நேரம் ஆகியும் மத்திய அரசு இது குறித்து எந்தவிதமான அறிக்கையையும்வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

நமது நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டனவா என்று கேள்விநேரத்தின்போது கேட்ட காங்கிரஸ் உறுப்பினர் ஜனார்த்தன் ரெட்டி, இச்சம்பவம் நமது பாதுகாப்புக்குவிடப்பட்டுள்ள சவால் என்று கூறினார்.

அமெரிக்கக் கப்பல் நம் நாட்டுக்கு எதற்காக வந்தது என்று கேள்வி எழுப்பிய மற்றொரு காங்கிரஸ் உறுப்பினர்மார்க்கரெட் ஆல்வா, அவர்களுடைய கேளிக்கைக்காக நம் நாட்டுப் பெண்களை உபயோகித்துக் கொள்கிறார்கள்என்று கூறினார்.

இதை மதிமுக உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாசுதேவ் பட்டாச்சார்யா எழுந்து, இந்த விஷயத்தை மத்தியஅரசு உண்மையிலேயே அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டதா என்று கேள்வி எழுப்பினார். அமெரிக்க கப்பல்உடனடியாக சென்னை துறைமுகத்தை விட்டு வெளியேற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரியஜனதா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து அரசு நாளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர்பி.எம்.சயீத் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+