For Daily Alerts
Just In
ஈரோடு அருகே கார்-லாரி மோதி 6 பேர் பலி
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்று (வியாழக்கிழமை) காலை டாடா சுமோ காரும் லாரியும் நேருக்குநேர் மோதியதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சேலம் அருகே ஆத்தூரிலிருந்து டாடா சுமோ கார் ஒன்று திருப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பெருந்துறை அருகே பள்ளகவுண்டன்பாளையம் கிராமத்தில் இந்தக் கார் வந்து கொண்டிருந்த போது, எதிரேவேகமாக வந்த ஒரு லாரி இதன் மீது பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த ராமராஜ், அவருடைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஐந்து பேர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட பின் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, November 29, 2001, 5:30 [IST]