மக்களுக்கு சந்தோஷமென்றால் எனக்கும் சந்தோஷம்தான்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்த விலை உயர்வுகளை, கட்டண உயர்வுகளை தமிழக மக்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால் எனக்கும்சந்தோஷம்தான் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநதி நிருபர்களிடம் கூறியதாவது:
கொள்கை அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவுகளை, சட்டசபையில் வைத்து அறிவிக்கப்பட வேண்டியவிஷயங்களை, வெளியில் வைத்து அறிவித்துள்ளது இந்த அரசு. இதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை.
இந்த விலை உயர்வுகளை, கட்டண உயர்வுகளை தமிழக மக்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டால் எனக்கும்சந்தோஷம்தான். இந்த கட்டண உயர்வுகள் குறித்து தமிழக மக்கள்தான் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications