For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் மோதலில் 7 ராணுவத்தினர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நேற்று (புதன்கிழமை) இரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர்சுட்டுக் கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராணுவத்தினர் சென்ற ஜீப் மீது திடீர்தாக்குதல் நடத்தியதில் பல ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவும் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தினர்.துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் ஏழு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர்திருப்பித் தாக்கியதில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து காஷ்மீர் முழுவதும், குறிப்பாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் சுட்டு 16 பாகிஸ்தான் வீரர்கள் பலி

இதற்கிடையே எல்லைக் கோட்டுக்கு அருகே இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர்த்தாக்குதல் நடத்தினர். உடனே இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியதில், 16 பாகிஸ்தான் வீரர்கள்கொல்லப்பட்டனர்.

பல மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின்போது, பாகிஸ்தானின் 12க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளும்அழிக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X