டெல்லியில் விடுதலைப் புலிகளா?: தீவிர விசாரணை
டெல்லி:
இந்தியாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய கமாண்டர் பிடிபட்டுள்ளார்.
ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்தபுலிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் புலிகள் அமைப்பினரே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் மத்தியப்பிரதேசத்தில் புலிகள் இயக்கதைச் சேர்ந்த பெலகாளி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது இலங்கையில் பல கொலை வழக்குகள் உள்ளன. 17 இலங்கை ராணுவ வீரர்களைக் கொன்ற வழக்கும்உள்ளது. இந்தியாவில் 1998ம் ஆண்டு பதிவான போதை மருந்து தொடர்பான வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டுஉள்ளது. டெல்லி போலீஸ் இந்த வழக்கை பதிவு செய்திருந்தது.
கடந்த மாதம் கைதாகி மத்தியப் பிரதேசத்தில் சிறையில் இருந்த இவரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்றுடெல்லி கொண்டு சென்றனர். போதை-தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள்குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் டெல்லியில் அவருக்கு பலரிடம் தொடர்பிருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. அவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. டெல்லியில் புலிகளுக்கு நெட்வோர்க் ஏதும் உள்ளதாஎன்ற தீவிர விசாரணையில் மத்திய அரசு இப்போது இறங்கியுள்ளது.
டெல்லி மாநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார். இதனால், இவர் காவல் நிலையத்திலோ அல்லது மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளின்அலுவலகத்திலோ வைத்து விசாரிக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications