சரணடையாதீர்கள்: கமாண்டர்களுக்கு ஒமர் உத்தரவு
காபூல்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடமோ அமெரிக்காவிடமோ யாரும் சரணடைந்து விடாதீர்கள் என்று தலிபான்தலைவர் முல்லா ஒமர் தன் கமாண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தலிபான் கமாண்டர்கள் யாரும் சரணடைந்து விடாதீர்கள். அமெரிக்காவை எதிர்த்து தாக்க வேண்டும்என்ற பிடியில் உறுதியாக இருங்கள் என்று ஒமர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே மசார்-ஏ-ஷெரீப்பில் நடந்த சிறைக் கலவரத்தில் அமெரிக்க உளவுப் படையான சி.ஐ.ஏவைச்சேர்ந்த அதிகாரியும் கொல்லப்பட்டார் என்ற தகவலை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கிய அல்-காய்தா தலைவர்கள் பலி
இதற்கிடையே சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா இயக்கத்தைச் சேர்ந்த ஆறுக்கும் மேற்பட்டமுக்கியமான தலைவர்கள் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனாலும் இன்னும் நூற்றுக்கணக்கான அல்-காய்தா இயக்கத்தினர் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
49 பாகிஸ்தான் வீரர்கள் விடுதலை
இதற்கிடையே ஜலாலாபாத்தில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களில் 49 பேரைநார்த்தர்ன் அலையன்ஸ் விடுதலை செய்தது.
பாகிஸ்தானில் உள்ள ஒரு மதவாத இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் கடந்த மாதம் நுழைந்து,தலிபான்களுக்கு ஆதரவாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரை எதிர்த்துப் போரிட்டனர்.
ஆனால் ஜலாலாபாத் கைப்பற்றப்பட்ட பிறகு, இந்த 200 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில்49 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களையும் விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications