"நோயே தெரியாமல் மருந்து கொடுத்துள்ளது அரசு": சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிதி நெருக்கடிக்கான காரணங்களை ஆராயாமல் மக்கள் மீது ரூ.3,500 கோடிக்கான நிதிச் சுமைகளை ஏற்றியுள்ளதுஅதிமுக அரசு என்று தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
கட்டண உயர்வுகள் பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கட்டணங்களையும் விலைகளையும் ஏற்றி விட்டு, மருந்து கசப்பாகத்தான் இருக்கும் என்று கட்டண உயர்வுகளைநியாயப்படுத்திக் கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஆனால் நோயின் அடிப்படையே தெரியாமல் மருந்து கொடுத்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது?
நிதி நெருக்கடிக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் ரூ.3,500 கோடிக்கான நிதிச் சுமையை மக்கள் மீதுஅதிமுக அரசு ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தக் கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை அதிமுக உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுகூறினார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications