கிரிக்கெட்: இங்கிலாந்து சுற்றுப் பயணம் ரத்தாகுமா?
கொல்கத்தா:
மொஹாலியில் வரும் திங்கள்கிழமை (டிச.3) துவங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியஅணியில் வீரேந்திர சேவாக் இடம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை ரத்து செய்யும் என்று தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவுடன் கடந்த வாரம் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாததன் மூலம் சேவாக்தண்டனையை அனுபவித்து விட்டார். அதனால் அவர் மொஹாலி டெஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்தியகிரிக்கெட் போர்டு விளக்கமளித்துள்ளது.
ஆனால், அந்த மூன்றாவது டெஸ்டையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகரிக்கவில்லை என்பதால்,மொஹாலி டெஸ்ட்டில் சேவாக்கைக் கட்டாயம் நீக்க வேண்டும் என்று அது கூறியிருந்தது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு இன்றைக்குள்ளாக (வெள்ளிக்கிழமை) விளக்கமளிக்க வேண்டும் என்றும்ஐ.சி.சி. உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியாவுடன் பேசுவதற்கு தயார் என்றும்ஐ.சி.சி. கூறியிருந்தது.
அதன்படி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை ஐ.சி.சி. தலைவர்களான மால்கம் ஸ்பீடையும் மால்கம்கிரேயையும் சந்திக்கவிருப்பதாக டால்மியா இன்று நிருபர்களிடம் கூறினார்.
இதற்கிடையே ஐ.சி.சியின் உத்தரவை மீறி இங்கிலாந்து அணியினர் இந்தியாவில் விளையாடத் தயாராக இல்லைஎன்று தெரிகிறது.
எனவே மலேசியப் பேச்சுவார்த்தையின் முடிவில்தான் சேவாக் இந்திய அணியில் இருப்பாரா என்பதும்,இங்கிலாந்து அணி தன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்யுமா என்பதும் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications