சாவு எண்ணிக்கை 20ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் அருகே விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3பெண்களும் அடக்கம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் மற்றும் அருங்குணம் கிராமங்களில் சுமார் 70 விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஒரு மதுக் கடையில் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.

சாராயத்தைக் குடித்தவுடனேயே ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார். மற்ற அனைவருக்குமே வாந்தி, மயக்கம்ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஒரு பெண் உள்பட 9 பேர்உயிரிழந்தனர்.

அதன் பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 68 பேர் கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு இன்று காலை சாராயம் விற்ற சின்னப் பொண்ணு என்ற பெண் உள்பட மேலும் மூன்றுபேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை20ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 20க்கும் மேற்பட்டவர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+