காஷ்மீரில் 8 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் உள்பட 8தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கூப்வாரா மாவட்டத்தில் வில்காம் காட்டுப் பகுதிக்குள் இன்று (வெள்ளிக்கிழமை)காலை திடீரென்று நுழைந்த பாதுகாப்புப் படையினர், அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல்நடத்தினர்.

தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு பிரிவினருக்கும் இடையே இங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில்அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே காந்தர்பால் பகுதியில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்தீவிரவாத இயக்கத்தின் கமாண்டரான யாசின் அஹமது லோன் என்ற காலித் சைபுல்லா கொல்லப்பட்டார்.

அப்போது அவர் மறைத்து வைத்திருந்த பிஸ்டல், கிரினேட் குண்டுகள் உள்பட பல ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.

இவர்கள் தவிர பரமுல்லா பகுதியிலும் பாட்காம் பகுதியிலும் நடந்த வெவ்வேறு ராணுவத் தாக்குதல்களில் நான்குதீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்தும் ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டன.

ஹரிப்போரா-ஹேண்ட்வாராவில் ஏ.கே. ரக துப்பாக்கி உள்பட சில ஆயுதங்களுடன் ஜாவித் அகமது பட் என்றதீவிரவாதியும் ராணுவத்திடம் சரணடைந்தான்.

இதற்கிடையே கூப்வாரா பகுதியில் ஹேண்ட்வாராவில் உள்ள ஒரு வீட்டை நேற்றிரவு சோதனையிட்டராணுவத்தினர், 20 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துகளைக் கைப்பற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+