கட்டண உயர்வு: போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் முடிவு
சென்னை:
சட்டசபையைக் கூட்டாமல் ஜனநாயக விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வுகள் மற்றும் விலைஉயர்வுகளைக் கண்டித்து போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) நடந்த அக்கூட்டத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
விலைவாசி உயர்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேலும் சீரழிக்கும் வகையில்அதிமுக அரசு கட்டண உயர்வுகளை அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் முதுகில் அதிமுக அரசு குத்தியுள்ளது.
சட்டசபையைக் கூட கூட்டாமல் ஜனநாயக விரோதமாகச் செயல்பட்டுள்ள அதிமுக அரசை நாங்கள் வன்மையாகக்கண்டிக்கிறோம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாகத்திரும்பப் பெற வேண்டும்.
இல்லையென்றால், அதிமுக அரசைக் கண்டித்து மாநில அளவில் வலுவான போராட்டங்களை அனைத்துவடிவங்களிலும் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.
இதற்காக மக்களைத் திரட்டி இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் கலந்து ஆலோசிக்கப்படும்.
விலை உயர்வைக் கண்டித்து மக்கள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துஅமைப்புகளும் தீவிரமாக கண்டனப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அக்கட்சியுடன் கூட்டணிவைத்திருந்து, பின்னர் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் கூட்டணியை முறித்துக் கொண்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications