புதுவையிலிருந்து வந்த விஷச் சாராயம்
பாண்டிச்சேரி:
கடலூர் மாவட்டத்தில் 20 பேர் சாவுக்குக் காரணமாக இருந்த விஷச் சாராயம் பாண்டிச்சேரியிலிருந்துதான்கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் மற்றும் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்சிலர் ஒரு மதுக் கடையில் சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.
இச்சாராயத்தைக் குடித்ததில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இங்கு சப்ளை செய்யப்பட்ட சாராயம் பாண்டிச்சேரியிலிருந்துதான் கொண்டுவரப்பட்டதாகக்கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் இறந்து போன சின்னப் பொண்ணு என்ற சாராயம் விற்ற பெண்ணின் மகன் முருகன்தான்பாண்டிச்சேரியிலிருந்து சாராயத்தை வாங்கிக் கொண்டு சென்றார்.
இதையடுத்து பாண்டிச்சேரி போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். பாண்டிச்சேரியின் பல்வேறுபகுதிகளிலும் இன்று காலை தீவிர சோதனை நடத்திய போலீசார் கள்ளச் சாராயத்தைக் கைப்பற்றி அழித்தனர்












Click it and Unblock the Notifications