கட்டண உயர்வுகள்: டிசம்பர் 7ல் தமிழகம் முழுவதும் மதிமுக போராட்டம்
கோயம்புத்தூர்:
கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் டிசம்பர் 7ம் தேதி போராட்டம்நடத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து, இன்று அவர் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பஸ்-மின் கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகள் மூலம் அதிமுகவின் அராஜக ஆட்சி உச்சகட்டத்தைஅடைந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு ஒரு பெரும் பகல் கொள்ளையாகும்.
பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று கூறி மக்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொண்ட அதிமுக, இன்று அவர்களின்முதுகிலேயே நன்றாகக் குத்திவிட்டது.
இதுபோன்ற விலையேற்றம் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. இவ்வளவு ஏன், மத்திய அரசுகூட இதுபோன்ற விலை உயர்வை எப்போதும் அறிவித்திருக்கவில்லை.
இந்த கட்டண மற்றும் விலை உயர்வுகளை எதிர்த்து, வரும் டிசம்பர் 7ம் திே அனைத்து மாவட்ட கலெக்டர்அலுவலகங்களுக்கு முன்பாக மதிமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தும்.
மேலும் சென்னையில் டிசம்பர் 11ம் தேதி மதிமுக சார்பில் மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்நடத்தப்படும்.
அதிமுக தன்னுடைய கடைசி அத்தியாயத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இனி அதிமுகவிற்கு எதிர்காலமேஇல்லை.
இரு மாநில மக்கள் அநாவசியமாக மோதிக் கொள்வதைத் தவிர்க்கும் பொருட்டு கர்நாடக அரசு உடனடியாகநக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் மனிதாபிமான அடிப்படையில் வீரப்பன் காட்டுக்குத் தூதராகச் சென்ற நக்கீரன் ஆசிரியர் கோபாலைக்கைது செய்யும் எண்ணத்தையும் கர்நாடகப் போலீசார் கைவிட வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications