For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குகைகளில் பின்லேடனைத் தேடும் பணி: அமெரிக்கா தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

ஜலாலாபாத்:

பின்லேடன் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் டோராபோரா பகுதியை அமெரிக்கப் படையினர் நெருங்கிவருகின்றனர். ஜலாலாபாத் நகரின் தெற்கே உள்ள இந்தப் பகுதி குகைகள், மலைகள் நிறைந்தது.

இதற்கிடையே தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காண்டஹார் நகரின் பல பகுதிகளில் நார்த்தர்ன்அலையன்ஸ் படை நுழைந்துவிட்டது. இந்த நகரின் விமான நிலையத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்ததலிபான்களின் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை இந்தப் படையினர் கைப்பற்றிவிட்டனர்.

இங்கிருந்த 80 தலிபான் வீரர்களையும் நார்த்தர்ன் அலையன்ஸ் சுற்றி வளைத்துப் பிடித்தது.

காண்டஹார் தாக்குதலை நார்த்தர்ன் அலையன்சிடம் விட்டுவிட்டு தனது படைகளை ஜலாலாபாத் நோக்கிஅனுப்பியுள்ளது அமெரிக்கா. இங்கு குகைகளில் நுழைந்து தேடும் பணியில் அமெரிக்கப் படைகள்ஈடுபடவுள்ளனர்.

முல்லாவுக்கு மன்னிப்பில்லை- அமெரிக்கா:

பின்லேடனுடன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் தலிபான்களின் தலைவர் முல்லா ஒமருக்கு எக் காரணம்கொண்டும் மன்னிப்புத் தர முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறுகையில், காண்டஹாரை விட்டுத் தருவதற்காக முல்லாஒமர் பொது மன்னிப்பும், தப்பிச் செல்ல அனுமதியும் கோரலாம் என்று தெரியவருகிறது. இதை அமெரிக்காஏற்காது.

அதே போல ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பொறுப்பை நார்த்தர்ன் அலையனசிடமே ஒப்படைத்துவிடலாம்.இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின படை வர வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை என்றார்.

சிறையில் சிதறிக் கிடக்கும் 500 உடல்கள்:

இந் நிலையில் மஷார்-ஏ-ஷெரீப் நகரில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க அமெரிக்க விமானங்கள்நடத்திய குண்டுவீச்சில் பலியான தலிபான்களின் எண்ணிக்கை 500 ஆக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தச் சிறையில் இந்த தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் இன்னும் சிதறிக் கிடப்பதாக ரெட்கிராஸ் அமைப்புதெரிவித்துள்ளது. இதில் 175 உடல்களை ரெட் கிராஸ் மீட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X