விலைவாசி உயர்வு: செயற்குழுவைக் கூட்டுகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக திமுக செயற்குழுக்கூட்டம் வருகிற 3ம் தேதிஅண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் கட்டண உயர்வு குறித்தும், அதை கண்டித்து போராட்டம்நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படும்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர்க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்போதைக்கு தேர்தல் ஏதும் இல்லாததால் பந்த் போன்ற கடும் போராட்டத்தில் திமுக இறங்க வாய்ப்பில்லை என அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications