29 பேர் கண்பார்வை இழந்தனர்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே விஷச் சாராயம் அருந்திய 29 பேருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது என மருத்துவர்கள்தெரிவித்தனர்.
மேலும் பலருக்கு பார்வை மங்கிக் கொண்டுள்ளது. இவர்களில் பலரும் பார்வை இழக்கலாம் என்பதால் என்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் கடலூரில் கண் மருத்துவர்கள் போதிய அளவில் இல்லாததால் சென்னையிலிருந்து ஒரு மருத்துவக்குழு கடலூர் விரைந்துள்ளது. இவர்கள் தவிர பொது மருத்துவர் குழுவும் சென்னையிலிருந்து வந்துபாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications