தமிழகத்தில் கட்டண உயர்வுகள் அமலுக்கு வந்தன: சிரமத்தில் மக்கள்
சென்னை:
தமிழகத்தில் பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, ரேஷன் பொருள்களின் விலை ஆகியவை நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்தன.இதன் தாக்கத்தை மக்கள் இன்று முதல் (சனிக்கிழமை) உணர்ந்தனர்.
இவற்றின் விலைகளை சமீபத்தில் தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த விலையேற்றம், கட்டண உயர்வுஅமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்தது.
நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயங்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் புதிய கட்டணமே வசூலிக்கப்பட்டது.
சென்னையில்...
சென்னை நகரில் புதிய கட்டண விகிதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் புதிய டிக்கெட்டுகள் இன்னும் அடித்துமுடிக்கப்படாத காரணத்தால், பழைய டிக்கெட்டுகளை வைத்தே புதிய உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, ரூ. 2 க்கான டிக்கெட்டுகளில் பிரச்சினையில்லை. அதற்குப் பிறகு 50 பைசா கூடுதலாக டிக்கெட்டுகள் இருப்பதால், ரூ 2.50க்கானகட்டணத்திற்கு ரூ. 2.75 க்கான டிக்கெட்டும், ரூ. 3க்கான கட்டணத்திற்கு 1.50 டிக்கெட்டுக்கள் இரண்டும், 3.50க்கான கட்டணத்திற்கு 1.75டிக்கெட்டுக்கள் இரண்டும் தரப்படுகின்றன.
புதிய டிக்கெட்டுகள் விரைவில் நடைறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, காலையில் பால் வாங்கச் சென்றவர்களிடமும் கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டது. ஆவின் பூத்களில் கார்டு மூலம் பால்வாங்குவோர் உயர்த்தப்பட்ட தொகையை காசாகக் கொடுத்தால் தான் பால் தரப்பட்டது.
மின் கட்டணம் இன்று முதல் உயர்கிறது.