காரிலிருந்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டாரா ஜீவஜோதியின் கணவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலனின் தூண்டுதலால் கடத்தப்பட்ட ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ்சாந்தகுமார் ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.

தன்னிடம் மேனேஜராக வேலை பார்த்துவந்தவரின் மகளான ஜீவஜோதியின் மீது கண் வைத்த ராஜகோபால்அந்தப் பெண்ணை 3வது திருமணம் செய்ய முயன்றதால் பிரச்சனை ஏற்பட்டது. ஏற்கனவே, பிரின்ஸ் சாந்தகுமாரைகாதல் திருமணம் செய்திருந்த ஜீவஜோதி இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்காததால் கோபமடைந்தார் ராஜகோபால்.

பிரின்ஸையும் ஜீவஜோதியையும் ஆட்களை வைத்துக் கடத்தினார். பின்னர் ஜீவஜோதியையும் பிரின்ஸையும்பிரித்தார். ராஜகோபாலிடம் இருந்து ஜீவஜோதி தப்பிவிட்டார். ஆனால், கடத்தப்பட்ட பிரின்ஸ் என்ன ஆனார்என்று தெரியவில்லை.

இந் நிலையில் ராஜகோபாலும் அவரது அடியாட்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, திருநெல்வேலியில் இருந்து கடத்தப்பட்ட பிரின்ஸ் வழியில்தப்ப முயன்றதாகவும் இதையடுத்து காரில் வைத்தே தாக்கியதாவும் கூறியுள்ளனர். பின்னர் அந்த காரிலேயேஅவரை சென்னை கொண்டு செல்லத் திட்டமிட்டுக் கிளம்பியதாகவும் ஆனால், அவரக் வழியில் தப்ப முயலவேமீண்டும் அவரை அடித்துத் துன்புறுத்தி பின்னர் ஓடும் காரிலிருந்து வெளியில் உருட்டி விட்டதாகவும்கூறியுள்ளனர்.

அவரை வெளியே தள்ளிவிட்டுவிட்டுச் சென்றிவிட்டதாகவும், அவர் எங்கே போனார் என்று தெரியவில்லைஎன்றும் அந்தக் கும்பல் போலீசிடம் கூறியுள்ளது.

ஆனால், உண்மையில் அவரை கொலை செய்துவிட்டுத் தான் இக் கும்பல் காரிலிருந்து உருட்டி விட்டிருக்கவேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். பின்னர் அரது உடலை இந்தக் கும்பலே புதைத்திருக்கலாம் என்றும்போலீசார் கருதுகின்றனர்.

இன்னும் முழு உண்மையும் தெரியவராததால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+