For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள்-ராணுவம் கடும் மோதல்: 14 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

திருகோணமலை அருகே ராணுவ முகாம் அருகே விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்தசண்டையில் 10 புலிகள், 2 ராணுவ வீரர்கள், 2 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

60 பேர் கொண்ட விடுதலைப் புலிகளின் படை முட்டூரில் உள்ள கட்டப்பரிச்சன் பகுதியில அமைந்துள்ள ராணுவமுகாமை அதிகாலையில் தாக்கினர். இதையடுத்து ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

அருகில் இருந்த முகாம்களில் இருந்தும் ராணுவ வீரர்கள் அங்கு வந்து தாக்குதல் நடத்தினர். இதில் 10 புலிகள்கொல்லப்பட்டனர். 2 ராணுவத்தினரும் 2 பொதுமக்களும் பலியாயினர்.

புலிகளின் படைக்கு மூத்த வீரரான பதுமன் தலைமை தாங்கி வந்ததாக ராணுவம் கூறியுள்ளது.

ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் குண்டுவெடிப்பு:

இதற்கிடையே அரசுக்கு ஆதரவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் 2 பார்சல் வெடிகுண்டுகள்வெடித்தன. இதில் 19 பேர் காயமடைந்தனர்.

மட்டக்களப்பில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகத்தில் குண்டுகள் வெடித்தன. காயமடைந்தவர்களில் 8 பேர்பெண்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X