For Daily Alerts
Just In
புலிகள்-ராணுவம் கடும் மோதல்: 14 பேர் பலி
கொழும்பு:
திருகோணமலை அருகே ராணுவ முகாம் அருகே விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்தசண்டையில் 10 புலிகள், 2 ராணுவ வீரர்கள், 2 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அருகில் இருந்த முகாம்களில் இருந்தும் ராணுவ வீரர்கள் அங்கு வந்து தாக்குதல் நடத்தினர். இதில் 10 புலிகள்கொல்லப்பட்டனர். 2 ராணுவத்தினரும் 2 பொதுமக்களும் பலியாயினர்.
புலிகளின் படைக்கு மூத்த வீரரான பதுமன் தலைமை தாங்கி வந்ததாக ராணுவம் கூறியுள்ளது.
ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் குண்டுவெடிப்பு:
இதற்கிடையே அரசுக்கு ஆதரவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் 2 பார்சல் வெடிகுண்டுகள்வெடித்தன. இதில் 19 பேர் காயமடைந்தனர்.
மட்டக்களப்பில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகத்தில் குண்டுகள் வெடித்தன. காயமடைந்தவர்களில் 8 பேர்பெண்கள்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]