ரத ஊர்வலம் நடத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் என அரசுஊழியர்கள் கோரியுள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை நிதி நிலைமையைக் காரணம் காட்டி அரசு ரத்துசெய்துள்ளது. இதை எதிர்த்து ஆர்பாட்டம், போராட்டம நடத்தி வரும் அரசு ஊழியர்களுக்கு பொது மக்களின்ஆதரவு கிடைக்கவில்லை.

அலுவலக வேலையாக வரும் பொது மக்களிடம் லஞ்சம் கேட்டு அரசு ஊழியர்கள் தொல்லை தந்து பணம்வசூலிப்பது தான் இதற்குக் காரணம்.

ஆனால், பொது மக்கள் ஆதரவில்லாமல் தங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்பதால் ரதஊர்வலங்களை நடத்தி மக்களிடையே தங்கள் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு ஊழியர்கள்போராட்டக் குழு திட்டமிட்டுள்ளது.

இந்த ரதங்களின் தமிழகத்தின் 4 முக்கிய நகரங்களில் இருந்து புறப்படும். இவை பல்வேறு நகரங்கள் வழியாக 11ம்தேதி சென்னை வந்தடையும். 12ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும் அரசு ஊழியர்கள்திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+