நடிகர் விஜய்யைப் பார்க்க வீட்டை விட்டு ஓடிய மாணவி மாயம்
உடுமலை:
நடிகர் விஜய்யைப் பார்ப்பதற்காக வீட்டில் கூட சொல்லாமல் சென்னைக்குச் சென்ற உடுமலைப்பேட்டையைச்சேர்ந்த பிளஸ் டூ மாணவியைக் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை மகபூப் கான் வீதியைச் சேர்ந்த அருள்நாதன் என்பவர் மகள் சர்மிளா. பிளஸ் டூ மாணவியானசர்மிளாவின் தந்தை அருள்நாதன் இறந்துவிட்டதால், தற்போது அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறாள்.
கடந்த 27ம் தேதி மாலை டியூசனுக்குச் சென்று வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுச் சென்ற சர்மிளா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த சர்மிளாவின் உறவினர்கள் போலீசில்புகார் செய்தனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து சர்மிளா உடுமலைப் பேட்டையில் உள்ள தனது தோழிக்குப் போன் செய்த, நான்சென்னையில் இருக்கிறேன். நடிகர் விஜய்யைப் பார்க்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறாள்.
இதற்குத் தோழி ஏன் அவ்வாறு செய்தாய் என்று திட்டிவிட்டு, சர்மிளா போன் செய்த எஸ்.டி.டி.பூத்தை தொடர்புகொண்டு அவளைப் பிடித்து வைக்குமாறு வேண்டியிருக்கிறாள்.
ஆனால் அதற்குள் சர்மிளா மாயமாகிவிட்டாள்.
இதையடுத்து சென்னையில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு சர்மிளாவின் பெற்றோர்கள் தகவல் கொடுத்தனர்.மேலும் சென்னைக்குச் சென்று நடிகர் விஜய் வீட்டில் கேட்டதற்கு, விஜய் வீட்டில் இல்லை என்றும், சில நாட்களுக்குமுன்பு ஒரு பெண் விஜய்யைத் தேடி இங்கு வந்தாள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையிலும் போலீசில் புகார் செய்து, சர்மிளாவை அவளது உறவினர்கள் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications