விலை உயர்வை எதிர்த்து வைகோ போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வுகளைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 7ம் தேதிதமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதேபோல, மாவட்டத் தலைநகரங்களில் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்துவார்கள் என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications