For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவஜோதியின் கணவர் படுகொலை : இன்று உடல் தோண்டியெடுப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொடைக்கானல்:

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் ஆட்களால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உருட்டிவிடப்பட்டுகொலை செய்யப்பட்டதாகச் கூறப்படும் ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை)தோண்டி எடுக்கப்படுகிறது.

தன்னை மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக ஜீவஜோதி என்ற பெண் சரவணபவன்ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராஜகோபால் தற்போதுசிறையிலடைக்கப்பட்டு, போலீசார் அவரிடம் அவரது ஆட்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையின் போது ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானல் மலைப்பகுதியில்உருட்டிவிடடுக் கொலை செய்துவிட்ட விவரம் தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி கொடைக்கானல் வெள்ளி அருவி அருகே ஒரு ஆண்பிணம் அடையாளம்தெரியாத வகையில் சிதைந்து கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்தப் பிணத்தைக் கைப்பற்றி, அதன் அடையாளம் தெரியாததால் பல்வேறுகோணங்களில் அந்தப் பிணத்தின் படத்தை எடுத்துவிட்டு, மலைப்பகுதியில் புதைத்து விட்டனர்.

மேலும் காணாமல் போனபோது சாந்தகுமார் அணிந்திருந்த உடைகளும், பிணத்தின் உடைகளும் ஒத்துப்போயுள்ளன.

இந்தப் பிணத்தைத் தோண்டி எடுத்து அது சாந்தகுமாரின் உடல்தானா என்பதை உறுதிசெய்ய சென்னை போலீஸ்உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் ஒரு போலீஸ் படை, கொடைக்கானல் வந்துள்ளது.

பிணத்தை அடையாளம் காண்பிப்பதற்காக ராஜகோபால் மற்றும் அவரது உதவியாளர்கள் கார்மேகம், டேனியல்,உசேன், தமிழ்ச்செல்வன் ஆகியோரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

ராஜகோபாலின் வக்கீல் ஆனந்தும் உடன் சென்றுள்ளார். இன்று சாந்தகுமாரின் உடல்தானா என்பதை உறுதி செய்யஅந்தப் பிணம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X