சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை:
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று (சனிக்கிழமை) சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
மத்திய சென்னை மாவட்ட இலக்கிய அணித் தலைவர் சபி முகமது, மற்றும பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தமாவட்டப் பிரதிநிதிகள் புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, ரவி ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும்,கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவிஉள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகின்றனர்.
எனவே இனிமேல் கட்சியினர் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுகேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
இதேபோல மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி 105 வட்டச் செயலாளர் எட்டியப்பன், அந்தப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு வீரசாமி நியமிக்கப்படுகிறார்.
மேலும் பூங்கா நகர் 47 வது வட்டப் பொறுப்பாளராக கவுரிமுத்து நியமிக்கப்படுகிறார். இவர்களுடன் கட்சியின்மற்ற நிர்வாகிகள் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications