ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் படையினர்
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டின் தரைப் படையினரும் ஆப்கானிஸ்தானில் குவிய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க, இங்கிலாந்து தரைப் படையினருக்கு உதவும் வகையில் பிரான்ஸ் தரைப் படையினரும்ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஏற்கனவே பிரான்ஸ் அரசு தெரிவித்தது.
அதன்படி, கடந்த மாதம் 60 பிரான்ஸ் படையினர் தெற்கு உஸ்பெகிஸ்தானுக்கு வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) 40 பிரான்ஸ் தரைப் படையினர் மசார்-ஏ-ஷெரீப் விமான நிலையத்தில் வந்துஇறங்கினர்.
அவர்கள் முதற்கட்டமாக மசார்-ஏ-ஷெரீப் விமான நிலையத்திலும், அதன் ரன்-வேயிலும் ஏற்பட்டுள்ளகோளாறுகளைச் சரி செய்வார்கள். மேலும் வெடிக்காமல் கிடக்கும் குண்டுகளை அப்புறப்படுத்தும் பணியிலும்அவர்கள் ஈடுபடுவார்கள்.
அதற்குப் பிறகுதான் தாக்குதல் பணியை பிரான்ஸ் தரைப் படையினர் துவங்குவர்.
ஆப்கானுக்கு பாகிஸ்தான் வீரர்கள் அனுப்பப்பட்டனரா?
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் படையினருக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் வீரர்கள்அனுப்பப்பட்டுள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகின.
ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இருந்தாலும், ஆப்கானிஸ்தானிலிருந்து அந்த பாகிஸ்தான் வீரர்கள் விமானம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.