For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் முழுவதும் 73 லட்சம் குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்துஅளிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபோலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும்.

அந்த வகையில் இன்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்கும்தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் 73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.இதற்காக 40,339 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொட்டு மருந்து வழங்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், பஸ், ரயில், மற்றும் விமான நிலையங்களிலும்சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னையில் மட்டும் சுமார் 1,500 மையங்கள் செயல்படுகின்றன. இங்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும்பணியை சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதேபோல் மதுரையில் அம்மாநகர மேயர் செ. ராமச்சந்திரன் சொட்டு மருந்து அளிக்கும் பணியைத் துவக்கிவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X