For Daily Alerts
Just In
ராஜகோபால் மீது கொலை வழக்கு
சென்னை:
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து சரவணபவன் ஓட்டல்அதிபர் ராஜகோபால் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்தகுமாரைக் கடத்தியதாகத்தான் ராஜகோபால் மீது போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
கொடைக்கானல் மலையில் சாந்தகுமாரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, மலையிலிருந்து தள்ளிவிட்டதாகபோலீசாரிடம் ராஜகோபாலுடைய உதவியாளர் டேனியல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜீவஜோதி, அங்கு போலீசார் வைத்திருந்தசாந்தகுமாரின் உடைமைகளை அடையாளம் காட்டினார்.
இதையடுத்து சாந்தகுமாரின் கொலை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜகோபால் மீது போலீசார் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]