அணை விவகாரம்: தமிழகம்-கேரளத்துக்கு உதவ மத்திய அரசு தயார்
டெல்லி:
தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யதயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 132 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகம் திட்டமிட்டுள்ளது.இதற்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரள சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது பேசிய அம்மாநில பாசனத்துறை அமைச்சர்ஜேக்கப், தமிழகத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. இது தொடர்பாக அம் மாநில அரசுடன்பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் முழுவிவாதம் நடத்தப்படும் என்றார்.
முன்னதாக அணையைப் பார்வையிட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் அணையில் நீர்க் கசிவு இருப்பதாகவும்இதனால் உயரத்தை அதிகரிப்பது ஆபத்தில் முடியும் என்றும் கூறினர்.
ஆனால், இதைத் தமிழக பாசனத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். விவகாரத்தை திசை திருப்புவதற்காகத் தான்கேரளம் இவ்வாறு கூறுவதாகவும், அணையின் உயரத்தைக் கூட்டுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றனர்.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை இன்று நாடாளுமன்றத்திலும் வெடித்தது. இரு மாநில எம்.பிக்களும் இப்பிரச்சனையைக் கிளப்பினர். இதையடுத்துப் பேசிய மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சுஜோய் சக்ரவர்த்திபேசுகையில், இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய மத்திய அரசு தயாராகஉள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications