பந்த்துக்கு திமுக ஆதரவு தருமா? - செயற்குழு விவாதிக்கிறது
சென்னை:
காங்கிரஸ், தமாகா , கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து வருகிற 7ம் தேதி நடத்தவுள்ள பந்த்துக்கு திமுகவும் ஆதரவுஅளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணம், ரேஷன் பொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்துகாங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எட்டு கட்சிகள் இணைந்து வருகிற7ம் தேதி பந்த் நடத்தவுள்ளன.
இந்நிலையில் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் ஆதரவையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடவுள்ளன.
இருப்பினும் இந்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்துமுடிவெடுப்பதற்காக திமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயம்வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பந்த்துக்கு ஆதரவு தருவதா, இல்லையாஎன்பது குறித்து திமுக முடிவெடுக்கவுள்ளது.
அதேசமயம், திமுக தனியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புவதாகவும்கூறப்படுகிறது. அப்போதுதான் தனித்தன்மை இருக்கும் என்று கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடினால் தமிழக அரசியலில் அதிமுகதனிமைப்படுத்தப்படும் என்றும் திமுகவின் சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தக் கருத்துக்களுக்கு மத்தியில் திங்கள்கிழமை கூடும் திமுக செயற்குழுக் கூட்டத்தில் போராட்டம் குறித்துமுடிவெடுக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications