For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவஜோதியின் கணவர் உடலைக் கடத்த முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

கொடைக்கானல்:

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் ஆட்களால் கொலை செய்யப்பட்ட ஜீவஜோதியின் கணவர்சாந்தகுமாரின் உடலை அவர்கள் கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசப்பட்ட சாந்தகுமாரின் உடல் பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டதாகத்தான்கொலையாளிகள் நினைத்துள்ளனர்.

ஆனால் 20 அடி ஆழத்தில்தான் பிணத்தைக் கண்டெடுத்தனர் கொடைக்கானல் போலீசார். கொலை செய்யப்பட்டமூன்று நாட்கள் கழித்து அப்பிணத்தைக் கைப்பற்றிய போலீசார், பல்வேறு கோணங்களில் அதைப் புகைப்படம்எடுத்து விட்டு, போஸ்ட்மார்ட்டம் நடந்த பிறகு புதைத்து விட்டனர்.

போலீசாரிடம் பிணம் சிக்கி விட்டதை அறிந்த கொலையாளிகள், கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலிருந்துசாந்தகுமாரின் உடலைக் கடத்திச் சென்று அழித்து விடத் திட்டம் போட்டுள்ளனர்.

ஆனால், அங்குள்ள டாக்டர்கள் ஒத்துழைக்காத காரணத்தால் அவர்கள் சென்னை திரும்பிவிட்டதாகக்கூறப்படுகிறது.

இதன் பின்னர் அந்த உடலை போலீசாரே புதைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X