கணவரின் உடைகளைப் பார்த்து ஜீவஜோதி கதறல்
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
சாந்தகுமாரின் உடலை அடையாளம் காட்டுவதற்காக ஜீவஜோதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொடைக்கானல் அழைத்துச் செல்லப்பட்டார்.
போலீசாரால் புதைக்கப்பட்ட சாந்தகுமாரின் பிணம் நேற்று தோண்டி எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தோண்டப்படவில்லை, இன்று அந்தப் பணிநடக்கிறது.
உடலை அடையாளம் காட்ட ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தந்தை ராமசாமி, மாமாக்கள் முத்தரசு மற்றும் தசமணி ஆகியோர் நேற்று காலை11.30 மணிக்கு கொடைக்கானல் போலீஸ் நிலையம் வந்தனர்.
அங்கு சாந்தகுமாரின் உடலை புதைப்பதற்கு முன் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட், சட்டை, பெல்ட் மற்றும் போட்டோக்களைஜீவஜோதியிடம் போலீசார் காட்டினர்.
அவற்றைப் பார்த்து ஜீவஜோதி கதறி அழுதார்.












Click it and Unblock the Notifications