ஜீவஜோதி மீதும் போலீசார் சந்தேகம்
சென்னை:
தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்டது ஜீவஜோதிக்கு ஏற்கனவே தெரியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராஜகோபாலின் தூண்டுதலின்பேரில் ஜீவஜோதிக்கு தெரிந்தே தான் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும் என்று விசாரணை நடத்தி வரும் போலீசார்சந்தேகப்படுகின்றனர்.
ஆனால், தானும் கொலை வழக்கில் சிக்கிவிடலாம் என்று பயந்து தான் ராஜகோபாலைக் காட்டிக் கொடுத்துவிட்டு ஜீவஜோதி கடத்தல் கதைகட்டவிழ்த்து விட்டதாகக் கூறப்படுகிது.
தன்னையும் தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரையும் ராஜகோபாலின் ஆட்கள் கடத்தியதாகவும் பின்னர் பிரின்ஸை மட்டும் தனியே கொண்டுசென்றதாகவும் ஜீவஜோதி கூறி வந்தார். அவர் ராஜகோபாலின் பிடியில் இருந்து எப்படித் தப்பி வந்து போலீசிடம் புகார் கூறினார் என்பதில் பலசந்தேகங்கள் உள்ளன.
மேலும் ராஜகோபாலுக்கும் தனக்கும் உள்ள பிற வகையான தொடர்புகளை ஜீவஜோதி மறைத்து வருகிறார் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.ஜீவஜோதியின் பல அந்தரக விஷயங்கள் ராஜகோபாலுக்குத் தெரிந்துள்ள விஷயத்தையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஜீவஜோதி, ராஜகோபால் வழக்கமாக கன்சல்ட் செய்யும் டாக்டர் ஒருவர் போலீசாரிடம் கூறியுள்ள தகவலின்படி இந்த இருவருக்கும் இடையேவேறுவிதமான விவகாரங்களும் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சாந்தகுமார் இறந்துவிட்டரா இல்லை உயிருடன் இருக்கிறாரா என்று சந்தேகம் நிலவி வந்த நேரத்திலேயே சென்னையில் ஜீவஜோதிபேட்டியளிக்கும்போது, "என் கணவருக்கு கருமாதி செய்தது போல சடங்குகளைச் செய்தேன்" என்றார்.
அவர் "கருமாதி" என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தியதால், தற்போது போலீசார் அவர் மீது பலத்த சந்தேகப்படுகின்றனர். கணவர் சாந்தகுமார்இறந்த விபரம் ஜீவஜோதிக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும் என போலீசார் நினைக்கின்றனர்.
இதனால், சாந்தகுமார் கொலை வழக்கில் ஜீவஜோதியும் குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications