For Daily Alerts
Just In
வாக்குமூலம் கொடுத்தவர் திடீர் பல்டி
சென்னை:
சாந்தகுமாரை கொலை செய்ததை முதலில் ஒப்புக் கொண்ட ராஜகோபாலின் அடியாள் டேனியேல் இப்போது அந்தக் கொலையை தான் செய்யவில்லை எனபல்டி அடித்துள்ளார்.
சாந்தகுமாரைக் கொலை செய்த விஷயத்தை போலீசாரிடம் கூறி, உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டியவர் டேனியல் தான். சாந்தகுமாரைகடத்தியச் சென்றதும் இவர் தான்.
இந்நிலையில், சாந்தகுமாரை நாங்கள் கொல்லவே இல்லை. இப்போதுதான் கொடைக்கானலுக்கே (சாந்தகுமார் உடல் வீசப்பட்ட இடம்) முதல்முறையாக வருகிறோம். எல்லாவற்றையும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று முக்கியக் குற்றவாளியான டேனியல்நிருபர்களிடம் கூறினார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]