ராஜகோபாலுக்கு நாடார் சங்கம் ஆதரவு
சென்னை:
ராஜகோபால் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நாடார் சங்கம் கூறியுள்ளது.
இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ராஜகோபால் மீது ஜீவஜோதியைக் கடத்தியது, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைகொலை செய்தது ஆகிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந் நிலையில் அவருக்கு ஆதரவாக அனைத்து நாடார்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்கூறப்பட்டுள்ளதாவது:
தனது திறமையாலும் அயராத உழைப்பாலும் ஹோட்டல் தொழிலில் நல்ல நிலையை அடைந்திருக்கும்ராஜகோபாலின் புகழையும், தொழிலையும் கெடுக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்த அவரது தொழில் எதிரிகள்சூழ்ச்சி செய்து போலீஸ் துணையோடு இந்த கேவலமான காரியங்களைச் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கவனித்து வரும் நாடார் சமுதாய மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
இவ்வாறு அனைத்து நாடார் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஜீவஜோதி விவகாரமும் ராஜகோபால் கைது விவகாரமும் தமிழகத்தின் சில முன்னணி நாளிதழ்களில்வெளிவரவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications