ஜீவஜோதியின் கணவர் படுகொலை
கொடைக்கானல்:
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் ஆட்களால் கொலை செய்யப்பட்டு கொடைக்கானல்மலைப்பகுதியில் வீசப்பட்டு, போலீசாரால் புதைக்கப்பட்ட ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் உடல் இன்று(திங்கள்கிழமை) தோண்டி எடுக்கப்படுகிறது.
இது நேற்று தோண்டியெடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால், எடுக்கப்படவில்லை. இன்று தான் பிணம் தோண்டிஎடுக்கும் பணி நடக்கிறது.
தன்னை மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக ஜீவஜோதி என்ற பெண் சரவணபவன்ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராஜகோபால் தற்போதுசிறையிலடைக்கப்பட்டு, போலீசார் அவரிடம் அவரது ஆட்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையின் போது ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானல் மலைப்பகுதியில்உருட்டிவிடடுக் கொலை செய்துவிட்ட விவரம் தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி கொடைக்கானல் வெள்ளி அருவி அருகே ஒரு ஆண்பிணம் அடையாளம்தெரியாத வகையில் சிதைந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்தப் பிணத்தைக் கைப்பற்றி, அதன் அடையாளம் தெரியாததால் பல்வேறுகோணங்களில் அந்தப் பிணத்தின் படத்தை எடுத்துவிட்டு, மலைப்பகுதியில் புதைத்து விட்டனர்.
மேலும் காணாமல் போனபோது சாந்தகுமார் அணிந்திருந்த உடைகளும், பிணத்தின் உடைகளும் ஒத்துப்போயுள்ளன.
இந்தப் பிணத்தைத் தோண்டி எடுத்து அது சாந்தகுமாரின் உடல்தானா என்பதை உறுதிசெய்ய சென்னை போலீஸ்உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் ஒரு போலீஸ் படை, கொடைக்கானல் வந்துள்ளது.
பிணத்தை அடையாளம் காண்பிப்பதற்காக ராஜகோபால் மற்றும் அவரது உதவியாளர்கள் கார்மேகம், டேனியல்,உசேன், தமிழ்ச்செல்வன் ஆகியோரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஜீவஜோதியும் கொடைக்கானல்கொண்டு செல்லப்பட்டார்.
ராஜகோபாலின் வக்கீல் ஆனந்தும் உடன் சென்றுள்ளார். இது சாந்தகுமாரின் உடல்தானா என்பதை உறுதி செய்யஅந்தப் பிணம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications