பொடோ: டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
டெல்லி:
பொடோ சட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
இதனால் இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவுக்கு போதியஎம்.பிக்கள் இல்லாததால் அனைத்துக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே இச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் தான் பெரும்பான்மையாக உள்ளது. இங்கு இந்தச் சட்டம் பிழைப்பது மிகக் கஷ்டம்.
இதையடுத்து இந்தச் சட்டம் விவாதிக்கவும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும் நாளை (செவ்வாய்க்கிழமை)அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
லோக்சபாவில் பேசிய பிரதமர், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் உதவ வேண்டும். இதில்ஏதாவது எதிர்ப்பு இருந்தால் அதை இங்கேயே தெரிவிக்கலாம். வேண்டிய மாற்றங்களைச் செய்து அந்த சட்டத்தைநிறைவேற்றலாம் என்றார்.
ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசால் நிறைவேற்ற முடியாமல் போனால், அந்த அரசுபெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கருதப்படும். இதையடுத்து அந்த அரசு பதவி விலக வேண்டும் என்றுஎதிர்க் கட்சிகள் வலியுறுத்தும். எனவே, இச் சட்டத்தை அவையில் கொண்டு வருவதற்கு முன் அதை நிறைவேற்றத்தேவையான எம்.பிக்களின் ஆதரவைப் பெரும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.