ரயில் தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் குறிப்பிட்ட நேரத்தில் அதிகாரிகளுக்கு ஒரு பெண்தெரிவித்ததையடுத்து, பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோயம்புத்தூர் வடக்கு ரயில்வே நிலையம் அருகே கணபதி பாலத்தையொட்டி ரயில் தண்டவாளத்தில் விரிசல்ஏற்பட்டிருந்தது. இன்று (திங்கள்கிழமை) காலை 7.30 மணிக்கு அந்த வழியாக வந்த ஒரு பெண் உடனடியாக ரயில்நிலையத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் இவ்விஷயத்தைக் கூறினார்.
அப்போதுதான் நாகர்கோவிலுக்குச் செல்லும் பேசஞ்சர் ரயில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.உடனடியாகச் செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் நாகர்கோவில் ரயிலை கோயம்புத்தூர் வடக்கு ரயில்நிலையத்திலேயே நிறுத்தினார்கள்.
விரிசல் ஏற்பட்டிருந்த அந்தத் தண்டவாளத்தில் சென்றிருந்தால், 1,400 பேரை ஏற்றிச் சென்ற இந்த ரயில்தடம்புரண்டு, பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்தபெண்ணை அதிகாரிகளும் பயணிகளும் பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து, தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. ஒரு மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு அந்தநாகர்கோவில் பயணிகள் ரயில் கிளம்பிச் சென்றது.