பஸ் கட்டண உயர்வால் ரயில்வேக்கு வந்தது வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

பஸ் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பஸ்சில் செல்வதைப் பெரும்பாலும் தவிர்த்து விட்டு,ரயில்களிலேயே பயணம்செய்ய ஆரம்பித்துள்ளதால், திருநெல்வேலி ரயில்வே சரகத்தில் மட்டும் கடந்த ஒருவாரத்தில் ரூ.2 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தற்போதைய பஸ் கட்டணத்துக்கும் ரயில் கட்டணத்துக்கும் சிறிதளவுதான் வித்தியாசம் என்று கூறும் மக்கள்,பஸ்களில் உள்ளதைவிட ரயில்களில் கூடுதல் வசதிகளும் இருப்பதால் இனி எங்களுக்கு ரயில் பயணம்தான் என்றுகூறுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக்கூறப்படுகிறது.

இதையடுத்து, தென்னக ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லைஎக்ஸ்பிரஸ் உள்பட பல முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த 48 நாட்களுக்கு திருநெல்வேலியிலிருந்து பல ஊர்களுக்கு சிறப்பு ரயில்களும் விடப்பட்டுள்ளனஎன்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அலுவலகம் செல்பவர்களுக்கு வசதியாக பகலிலும் இன்னும் அதிக ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள்தென்னக ரயில்வேக்கு ஐடியா கொடுத்து வருகின்றனர்.

மொத்தத்தில், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வால் தென்னக ரயில்வேக்குக்கொண்டாட்டம்; தமிழக அரசுக்கு (மேலும்) திண்டாட்டம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+